முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கோயில், 30 கடைகள் இடித்த தரைமட்டமாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் செட்டிக்குளம் உள்ளது. பிரதான பாசன வாய்க்காலான வடிவாய்க்கால் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தை கடந்து செட்டிக்குளத்திற்கு வந்து மெயின் ரோட்டை கடந்து செல்கிறது. இதில் தனியார் ஆக்கிரமிப்புகள் பெருகியதால் தண்ணீர் வரத்து தடைப்பட்டது.
இதுகுறித்து நாச்சிக்குளம் தாஹீர் என்பவர், தமிழக அரசின் 540அரசாணையை சுட்டிக்காட்டி செட்டிக்குளம் மற்றும் வடிவாய்க்கால்கள் மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கடந்தாண்டு அதிகாரிகளுக்கு மனுக அனுப்பினார்.