மும்பை: மராட்டியத்தில் ஆட்சியமைத்ததன் மூலம் பாஜக பட்டப்பகலில் ஜனநாயக படுகொலை செய்துள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் திடீரென பாஜகவை ஆதரிக்க அஜித் பவாரே காரணம் என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். அஜித் பவார் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பயந்துவிட்டதாகவும், சரத்பவாரின் உறவினர் அஜித்பவார் மராட்டிய மக்களின் முதுகில் குத்திவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தலைவர்களுடன் நடந்த கூட்டத்தில் அஜித்பவாரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சரத்பவாரின் உறவினர் அஜித்பவார் மராட்டிய மக்களின் முதுகில் குத்திவிட்டார் : சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்
- அஜித் பவார்
- சரத் பவார்
- சஞ்சய் ராவத்
- மராட்டிய
- சிவசேனா
- மகாராஷ்டிரா
- தேவேந்திர பாட்னைஸ்
- காங்கிரஸ்
- தேசியவாத