ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி

டெல்லி  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் 2 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற சிபிஐ நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு வரும் 27ம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது.  இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

 2 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி

இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 15ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ப. சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதன் எதிரொலியாகப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது.இதற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து திகார் சிறையில் உள்ள ப. சிதம்பரத்தை நாளையும், நாளை மறுநாளும் அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது.

Related Stories: