மாநகராட்சி மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திருப்பி வழங்கப்படும்: அதிமுக தலைமை அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு, மாநகராட்சி மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவுத்துள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தாங்கள் சார்ந்த மாநகராட்சி வார்டு, நகர மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகிறவர்கள் வெள்ளிக்கிழமை(22.11.2019) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, சம்பந்தப்பட்ட மாவட்ட தலைநகரங்களில், விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கழக நிர்வாகிகளிடம், உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்ப படிங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

மாநகராட்சி மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி மன்றத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி ஏற்கனவே கட்டணம் செலுத்தி விருப்பமனு அளித்துள்ளவர்கள், அதிமுக பொதுக்குழு முடிந்தவுடக் தாங்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணத் தொகைக்கான அசல் ரசீதுடன், 25.11.2019 முதல் 29.11.2019 வரை தலைமைக் கழகத்தில் நேரில் வந்து, அத்தொகையை பெற்றுக்கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டணம் திருப்பி வழங்கப்படும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: