கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து கோத்தபயவின் அண்ணன் ராஜபக்சே இன்று புதிய பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அனுராதபுரத்தில் புத்தமத கோயில் அருகே நடந்த விழாவில் அவர் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, தற்போது பிரதமர் பதவியில் இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, பதவியில் இருந்து தானாக விலகும் வகையில் ராஜபக்சேயும் அவரது கட்சியினரும் நெருக்கடி அளித்ததாக கூறப்படுகிறது. கோத்தபய ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை, ரணில் ஆதரித்து வந்தார். இதனால் ரணில் பதவி விலக வேண்டும் என்பதில் கோத்தபய உறுதியாக இருந்தாக கூறப்படுகிறது. மேலும், அந்த பதவியில் தனது சகோதரர் ராஜபக்சேயை அமர வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.