சென்னை: ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை மசோதாவின் போது காங்கிரஸ்கட்சி தலைவரையும் அறக்கட்டளை உறுப்பினராக சேர்ப்பது தான் நீதி என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசியதாவது: நவம்பர் 19. ஜாலியன் வாலாபாக் என்ற பெயரை உச்சரித்தாலே, புரட்சிகரமான எண்ணம் கொண்டவர்கள், போராளிகளின் நாடி நரம்புகளில் மின்சாரம் பாய்கின்றது. நினைத்தாலே நெஞ்சை நடுங்க வைக்கும் ஜாலியன் வாலாபாக் படுகொலை, பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்றது. அந்த நாள், சீக்கிய மக்கள் கொண்டாடுகின்ற பைசாகி திருநாள் ஆகும்.ஜாலியன் வாலாபாக்கில் உயிர் தப்ப முயன்று, அங்கிருந்த ஒரு கிணறுக்குள் குதித்த 120 பேர் இறந்தனர். மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டதாக அரசு சொன்னது, உண்மையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்.
ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை மசோதா காங். தலைவரையும் அறக்கட்டளை உறுப்பினராக சேர்ப்பது தான் நீதி: மாநிலங்களவையில் வைகோ பேச்சு
- ஜாலியன் வல்லபக் அறக்கட்டளை பில் காங்
- அறங்காவலர்
- ராஜ்ய சபா
- வைகோ
- பேச்சு
- சேரில்
- பேச்சுவார்த்தை
- நீதித்துறை தலைவர்
- ஜாலியன் வாலப் அறக்கட்டளை பில் காங்