அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாப பலி

பிரெஸ்னோ: அமெரிக்காவில் வீடு ஒன்றில் நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது, மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் பிரெஸ்னோ பீ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்பக்கம் விருந்து நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது பதுங்கி இருந்த மர்மநபர்கள் கூட்டத்தினர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.இதனிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மர்மநபர்களை பிடிக்கும் பணியை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.

Related Stories: