ஸ்ரீநகர்: சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப்பகுதி சுமார் 18,000 அடி உயரமானது. மேலும் உலகின் உயரமான போர்க்களம் என்று சியாச்சின் பகுதி வர்ணிக்கப்படுகிறது. இங்கு இங்கு வடக்கு பகுதியில் ராணுவ வீரர்கள் தங்கி முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.