சென்னை: இந்து முன்னணி ஆர்.கே.நகர் தொகுதி துணை தலைவர் மணிகண்டன், செயலாளர் அஜித் ஆகியோர் தலைமையில் கட்சியினர் ஆர்.கே.நகர் மற்றும் கொருக்குப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் புகார் மனு கொடுத்தனர். அதில், ‘‘பாண்டிச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடந்த விசிக கூட்டத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பேசியுள்ளார். இந்து மத உணர்வுகளையும் நம்பிக்கையையும் அவமதித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.