தூத்துக்குடி: குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வரும் திருப்பத்தூர் வாலிபருக்கு தூத்துக்குடியில் வரவேற்பளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள சவுடுகுப்பத்தை சேர்ந்தவர் சுந்தர்சுப்பிரமணியன்(26). பிளம்பரான இவர் பெங்களூருவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பசுமை பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த நவம்பர் 2ம்தேதி முதல் தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை துவக்கியுள்ளார். இந்தியாவின் 4 முக்கிய எல்லை பகுதிகளுக்கும் சென்று 13,500 கிமீ தொலைவு பயணம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்.