பணகுடி: பணகுடியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு உத்தமபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட ராமலிங்க சுவாமி-சிவகாமியம்மாள் மற்றும் நம்பி சிங்க பெருமாள் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயில் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இக்கோயில் சார்ந்த பணிகளை பார்க்கவும் பராமரிக்கவும் 15பேர் பணிபுரிந்து வந்தனர். ஆனால் தற்போது ஒரு பணியாளர் மட்டுமே அனைத்து பணிகளையும் பார்க்க வேண்டி உள்ளது. மேலும் தற்போது வரை நிர்வாக அலுவலரும் நியமிக்காமல் வள்ளியூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் இருந்து பொறுப்பில் இருந்துவிட்டு அவ்வப்போது வந்து செல்கின்றனர். இதனால் பணகுடி கோயில் தற்போது ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பக்தர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.மேலும் கோயிலில் துர்நாற்றம் வீசி வருவதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.