லாக்-அப் என்கவுன்டர் வழக்கு : ராமநாதபுரம் எஸ்.பி.க்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டனம் காவல் நிலையத்தில், லாக்-அப் என்கவுன்டர் விவகாரத்தில் எஸ்.ஐ. காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2014ம் ஆண்டு எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் காளிதாஸ் பணியாற்றிய போது செய்யது முகமது என்கிற விசாரணை கைதியை சுட்டுக் கொன்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகமது குடும்பத்திற்கு காளிதாசிடம் இருந்து ரூ.2 லட்சம் வசூலித்து கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: