விஜயவாடா: நான் மூன்று முறை திருமணம் செய்ததால், நீங்கள் சிறை செல்ல நேரிட்டதா?’’ என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திராவில் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், `அரசு நடத்தும் பள்ளிகள் ஆங்கில மீடியமாக மாற்றப்படும்’ என்று அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜன சேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர். மேலும், முறையான பயிற்சி பெற்ற ஆங்கில வழி கல்வி ஆசிரியர்கள் இல்லாமல், அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி பள்ளியாக எப்படி மாற்ற முடியும்? என்றும் கேள்வி எழுப்பினர்.