2011ம் ஆண்டு சரத்பவாரை அறைந்தவர் கைது

புதுடெல்லி:  கடந்த 2011ம் ஆண்டு ெபாதுநிகழ்ச்சியின்போது தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அறைந்த நபரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். தேசிய காங்கிரஸ் கட்சி தலைவரான சரத்பவார், கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது வேளாண் துறை அமைச்சராக இருந்தார். அப்போது நவம்பர் 24ம் தேதி டெல்லியில் உள்ள என்டிஎம்சி அரங்கில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் சரத்பவார் பங்கேற்றார். அப்போது டெல்லி ஸ்வரூப் நகரை சேர்ந்த அரவிந்தர் சிங் என்பவர் சரத்பவாரை அறைந்துவிட்டார். போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணையின்போது அவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் தலைமறைவான அர்விந்தர் சிங்கை டெல்லி போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related Stories: