லண்டன்: ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஆந்த்ரே அகாசி பிரிவு லீக் ஆட்டத்தில், அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) நம்பர் 1 வீரர் ரபேல் நடாலை (ஸ்பெயின்) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.லண்டன் ஓ2 அரங்கில் நடந்த இப்போட்டியில் நடாலின் சர்வீஸ் ஆட்டங்களை அதிரடியாக முறியடித்து புள்ளிகளைக் குவித்த ஸ்வெரவ் (7வது ரேங்க், 22 வயது) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். முதல் லீக் ஆட்டத்திலேயே இளம் வீரரிடம் தோல்வியைத் தழுவியது நடாலுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.