சென்னை: கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்களின் குடியிருப்போர் பெயர் மாற்றம் செய்யாவிட்டால் ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளது. இந்த வீடு, கடைகளில் வாடகைக்கு வசித்து வருவோர் பல ஆண்டுகளாக பெயர் மாற்றம் செய்யாமல் உள்ளனர். இதனால், வாடகையை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக அறநிலையத்துறை கூறி வருகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து, அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி வாடகைதாரர்கள் பெயர் மாற்றம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதை தொடர்ந்து அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பை ஒன்றை வெளியிடவும் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: