திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் பகுதியில் வேகமாக பரவி வரும் ஆந்த்ராக்ஸ் நோய்க்கு 110 ஆடுகள் பலியானது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் ஆட்டுக்கிடை நடத்தி வருபவர் ராமர். கிடையில் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. கடந்த நவ.5ம் தேதி முதல் அவருடைய ஆடுகள் ஒவ்வொன்றாக ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் இறந்து வருகின்றன. ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியவுடன் ஆடுகள் வாயில் நுரை தள்ளி ரத்தம் வடிகிறது. அடுத்த சில நிமிடங்களில் ஆடு இறந்து விடுகிறது.