பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு மலைப்பகுதியில் விட்டனர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வடக்கு வாய்க்கால் பகுதியில் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் பணியாளர்கள் வாய்க்கால் பகுதியில் உள்ள செடிகளை அகற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது வாய்க்கால் பகுதியில் பாம்பு ஒன்று கிடப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் வத்தலக்குண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறை வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.