புவனேஸ்வர்: ஒடிசாவில் ஓடும் காரில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் ரோட்டில் வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் நேற்று இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரி அருகே உடை கிழிந்த நிலையில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு குர்தா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண் குறித்து புவனேஸ்வரில் உள்ள கந்தகிரி பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தலைநகர் புவனேஸ்வரின் உள்ள கந்தகிரி பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தபோது அந்த இளம்பெண்ணுக்கு அவ்வழியே காரில் வந்த நபர் லிப்ட் கொடுத்து ஏற்றி சென்றுள்ளார்.