வருஷநாடு: வருசநாடு அருகே யானைகெஜம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உப்புத்துறை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது யானைகெஜம் அருவி. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், இந்த அருவிக்கு தண்ணீர் வர துவங்கியுள்ளது. கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ஆண்டிபட்டி, தேனி, கம்பம் சின்னமனூர், உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு வர துவங்கியுள்ளனர்.