புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையோரம் வசித்த மூதாட்டியிடம் கத்தை, கத்தையாக பணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயில் கடைகளுக்கு முன்பாக பிச்சைக்காரர்கள் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.இவர்களை கோயில் நிர்வாகத்தினர் நேற்று காலை அப்புறப்படுத்தினர். அப்போது ஈஸ்வரன் கோயில் வீதியில் 70 வயது மூதாட்டி ஒருவர், அந்த இடத்தை விட்டு நகராமல் பிடிவாதமாக இருந்தார். இதனால் அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் கத்தை, கத்தையாக பணம் இருந்தது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதியோர் உதவித்தொகை வாங்குவதற்கான புத்தகம், வங்கியில் கணக்கு வைத்திருப்பதற்கான புத்தகமும், அதில் ரூ.66 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. பின்னர், பணத்தை எண்ணி பார்த்ததில் ரூ.15 ஆயிரம் இருந்தது.