நீருக்கடியில் இருந்து ஏவப்படும் கே.4 அணு ஆயுத ஏவுகணைப் பரிசோதனை வெள்ளிக்கிழமை அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம், எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் திறனை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. (DRDO) உருவாக்கியுள்ள கே.4 என்ற அணு ஆயுத ஏவுகணையை பரிசோதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.