நாங்குநேரி: நாங்குநேரி அருகே சாலையில் தடைகளை ஏற்படுத்தி வாகனங்களில் வழிப்பறி செய்யும் முயற்சி நடப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். நாங்குநேரி அடுத்த மறுகால்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை விலக்கிலிருந்து வரமங்கைபுரம் வழியாக மீனவன்குளம், கள்ளிகுளம், அப்பர்குளம், காடுவெட்டி, நடுவக்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் கிராமச் சாலை உள்ளது. அவ்வழியாக அப்பகுதியைச் சேர்ந்த வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. அதில் கடந்த மாதம் ஸ்ரீவரமங்கைபுரத்தையொட்டிய காட்டுப்பகுதியில் உள்ள சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக பழுதான ஜல்லிக்கல் ஏற்றி வந்த மர்ம டிராக்டர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் தகவலளித்தும் போலீசார் பழுதான அந்த வாகனத்தை அப்புறப்படுத்த முன்வரவில்லை. இதனால் அவ்வழியாக செல்வதற்கு வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டன.