சென்னை: நீர்நிலைகளில் விபத்து, பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி விழிப்புணர்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மேலாண்மை குழுவினர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, வருவாய், பேரிடர் நிர்வாக துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, தீயணைப்பு துறை பொறுப்பு டிஜிபி சைலேந்திர பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர்.