சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:தாராபுரம் அருகில் அமைக்கப்படும் மிகப் பெரிய மின் சேமிப்பு மையத்தில் இருந்து, வட மாநிலமான சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல, கோயமுத்தூர் தொடங்கி, திருவண்ணாமலை வரையிலான 16 மாவட்டங்கள் வழியாக மின்தொடரமைப்பு அமைக்க விவசாய சாகுபடி நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.