ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் ஹிராநகரில் மன்யாரிசோர்காலி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர்.