போராட்டத்தை கைவிடுமாறு டெல்லி போலீசுக்கு ஆணையர் அமுல்யா பட்னாயக் வேண்டுகோள்

டெல்லி: டெல்லியில் போலீசார் 3 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு டெல்லி  போலீசுக்கு ஆணையர் அமுல்யா பட்னாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி போலீஸ் அமைதி காக்க வேண்டும் என்று போராடும் காவலர்கள் மத்தியில் ஆணையர் பேசினார். டெல்லி போலீஸ் சவாலான சூழ்நிலையை கடந்து கொண்டிருப்பதாக காவல் ஆணையர் அமுல்யா பட்னாயக் தெரிவித்தார். மேலும் சட்டம் ஒழுங்கை கவனத்தில் கொண்டு காவலர்கள் செயல்பட வேண்டும் என்று ஆணையர் அமுல்யா பட்னாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார். வக்கீல்களுடன் நடந்த மோதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதால் காவல்துறையினர் அமைதி காக்க ஆணையர் வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories: