திருவனந்தபுரத்தில் 9ம் வகுப்பு மாணவி கடத்தி பலாத்காரம்: 4 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம்  அருகே கடினம்குளம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. கடந்த  வெள்ளிக்கிழமை மாலை இந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர்  பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  ஆட்டோவில் வந்த கும்பல் மாணவியை கடத்தி சென்றது.    இதற்கிடையே  பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வராததால்  பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து கடினம்குளம் காவல்  நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு  செய்து மாணவியை தேடி வந்தனர். மறுநாள் காலை அந்த கும்பல் தும்பா பகுதியில்  மாணவியை விட்டுவிட்டு தப்பி சென்றது.

  இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று மாணவியிடம் விசாரணை  நடத்தினர். இதில், மாணவியை கடத்தி சென்றது 4 பேர் கும்பல் என்றும்,  அவர்கள் கோவளம் வர்க்கலாவில் உள்ள ஹோட்டலில் அடைத்து வைத்து மிரட்டி அவரை  பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.    இது தொடர்பாக நடந்த விசாரணையில்,  சோஜன் (23),  அபிலாஷ் (25), டோமி (23), நிரஞ்சன் (20) ஆகிய 4 பேரும் மாணவியை கடத்தி  பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து  திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: