சென்னை: மடிப்பாக்கம் பகுதியை ேசர்ந்த இளம்பெண் ஒருவர் ேநற்று வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் இருந்து தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர், அந்த இளம்பெண்ணை தனது பைக்கில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இளம்பெண் தனது வீட்டி சென்று, மொபட்டை நிறுத்திவிட்டு முதல் தளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதும் அந்த வாலிபர் இளம்பெண்ணை பின் தொடர்ந்து வீட்டின் முதல் மாடிக்கு சென்றுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், நீங்கள் யார்? எதற்கு என் பின்னால் வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர், நீங்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளீர்கள் என்று கூறி, ஒரு பார்சலை எடுத்து கொடுத்தார். அப்போது, அந்த இளம்பெண், நான் எந்த உணவையும் ஆர்டர் செய்யவில்லை, என்று கூறி, வெளியே செல்லுங்கள் என்று எச்சரித்துள்ளார். உடனே அந்த வாலிபர் உங்கள் வீட்டில் உணவு ஆர்டர் செய்து இருப்பார்கள், வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு, எங்கள் வீட்டில் யாரும் இல்லை. எல்லாம் வெளியே சென்று உள்ளார்கள், நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூறியபோது, அந்த வாலிபர் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு சாலையில் சென்ற பொதுமக்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.