திருச்சி: பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் சென்னை, பெங்களூருவில் புதைத்து வைத்த 1 கிலோ தங்கத்தை கொள்ளையன் சுரேஷ் தகவலின்படி போலீசார் மீட்டனர். காவல் விசாரணை முடிவதால் அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைகடையில் கடந்த மாதம் 2ம் தேதி சுவரில் துளையிட்டு புகுந்த மர்மநபர்கள் 13 கோடி மதிப்பு தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக, சுரேஷ், கணேஷ், சுரேஷின் தாயார் கனகவல்லி, மணிகண்டன், ராதாகிருஷ்ணன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்த கொள்ளையர் தலைவன் முருகனை காவலில் எடுத்த பெங்களூரு போலீசார், தமிழகம் அழைத்து வந்து திருவெறும்பூர் காவிரிகரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அந்த நகைகள் பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முருகனை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.