திருவில்லிபுத்தூர்: சசிகலாவை டிடிவி.தினகரன் ஏமாற்றுகிறார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:ரஜினிக்கு மத்திய அரசு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது பொருத்தமானது. அவரது நடிப்பு, அவரது யதார்த்தமான பேச்சுக்கு கிடைக்கும் விருது இது. மத்திய அரசு காலம் தாழ்த்தி வழங்கினாலும், பொருத்தமான நபருக்கு வழங்கியுள்ளது. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், தவறில்லை. ஆனால், திரைப்படத்தில் நடிப்பதுபோல நிஜ வாழ்க்கையிலும் நடிக்கக் கூடாது.