புழல்: புழல் காவாங்கரை, கன்னடபாளையம் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டு புழல் காவாங்கரை, கன்னடபாளையம் பகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெரு, ஜீவா தெரு, திருமலை நகர், சக்திவேல் நகர், காஞ்சிஅருள் நகர், தமிழன் நகர் மற்றும் திருநீலகண்டன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். சாலைகள் சரியாக இல்லாததால் வாகனங்கள் ஓட்டமுடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.