பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி நகராட்சிக்குடப்ட்ட இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக மார்க்கெட்ரோடு, பல்லடம்ரோடு, குமரன்நகர், கோட்டூர்ரோடு, மரப்போட்டைவீதி, பாலக்காடுரோடு, உள்ளிட்ட பல இடங்களில் நாய்கள் ஆங்காங்கே சுற்றித்திரிகிறது. பல்வேறு வீதிகளில் கூட்டமாக நிற்கும் தெருநாய்கள், அந்த வழியாக நடந்து செல்வேரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி செல்கிறது. நாய் துரத்தும்போது விபத்தில் சிக்கிகொள்ளும் நிலை ஏற்படுவதால், நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் உலா வரும் தெருநாய்களை கண்டு பொதுமக்கள் அச்சமடைகின்றனர்.