திருக்காட்டுப்பள்ளி: முல்லைக்குடி கீழத்தெரு சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றி சீரமைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் தீட்சசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட முல்லைக்குடி கீழத்தெருவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் சரியான வடிகால் இல்லாமல் தண்ணீர்தேங்கி குளம் போல் உள்ளது. மேல்நிலைநீர்தேக்க தொட்டி உள்ள பகுதியிலும் செல்ல முடியவில்லை. இதனால் தெருவில் நடக்கக்கூட முடியவில்லை. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.