தேவகோட்டை:தேவகோட்டை பழைய சருகணி ரோடு நகரின் தென் பக்கம் கடைசி பகுதியாகும். அங்கு கிருஷ்ணராஜபுரம் வீதியின் அருகில் சாலை ஓரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து காட்சி அளிக்கிறது. குப்பைகள் எடுப்பது பத்து தினங்களுக்கு ஒரு முறை அல்லது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே எடுக்கின்றனர். விசாரித்ததில் அப்பகுதி மக்கள், எங்கள் ஏரியாவில் குப்பைகள் எடுக்க யாருமே வருவது கிடையாது. அதனால் நாங்கள் வீட்டில் உள்ள குப்பைகளை இரண்டு மூன்று நாள்கள் சேர்த்து வைத்து குப்பைகள் கவிந்துள்ள இடத்தில் வேறு வழியின்றி கொட்டிச் செல்கின்றோம். என்கின்றனர். குப்பைகள் எடுக்கப்படாத நிலையில் பன்றிகள் நாய்கள் மாடுகள் கூட்டமாக வந்து குப்பைகளை பரப்பி அந்த இடத்தை மேலும் நாசப்படுத்துகிறது.