நித்திரவிளை: கரை திரும்பாத குமரி மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் பத்திரமாக மீன் பிடித்துக் கொண்டிருப்பதாக மீன்வளத்துறை இயக்குனர் தெரிவித்தார். குமரி மாவட்டம் வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த 5 விசைப்படகுகள், இரவிபுத்தன்துறை, மிடாலத்தை சேர்ந்த தலா ஒரு படகு என மொத்தம் ஏழு விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 92 பேர் கரை திரும்பவில்லை. இவர்களை தேடி நாளை (4ம் தேதி) 40 படகுகளில் மீனவர்கள் செல்ல இருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் வள்ளவிளை மீனவ கிராமத்திற்கு வந்த தமிழக மீன்வளத்துறை இயக்குநர் சமீரான் கூறியதாவது: கோவா கடல் பகுதியிலிருந்து 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் கரை திரும்பாத மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.