பெங்களூரு : ‘‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தியாகத்தின் மூலம் ஆட்சி அமைத்து தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு என்னை வெகுவாக வாட்டி வதைக்கிறது,’’ என பாஜ தேர்தல் குழு கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா உருக்கமாக கூறினார். டிசம்பர் 5ம் தேதி கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரு, மல்லேஷ்வரத்தில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான ெஜகன்நாத் பவனில் நேற்று பாஜவின் தேர்தல் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு முதல்வர் எடியூரப்பா தலைமை தாங்கி பேசியதாவது: எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்த 17 பேரை அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு இவர்களுக்கு 99% சாதகமாக வெளியாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.