டொனால்டு டிரம்பை பதவி நீக்கக்கோரிய தீர்மானத்திற்கு பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பதவி நீக்கக்கோரிய தீர்மானத்திற்கு பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். டிரம்பை பதவி நீக்கக்கோரி பிரநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தாக்கல் செய்த தீர்மானம் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 196 உறுப்பினர்கள் டொனால்டு டிரம்பிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை வேகமெடுத்துள்ளது. பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததும் டிரம்பிற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்ட டொனால்டு டிரம்ப், தனது வெற்றிக்கு உதவும்படி உக்ரைன் நாட்டு அரசிடம் உதவி கேட்டதாக தகவல் வெளியானது. தம்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று டொனால்டு டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவந்தார். இந்நிலையில் பிரதிநிதிகள் சபையில் டிரம்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: