பெங்களூரு: சொத்து வரி வசூல் குறித்த விபரங்கள் அடுத்தக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் உறுதி அளித்தார்.பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி வசூலிப்பதில் முறைகேடு நடந்துள்ளது என பெரும்பான்மையான உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர். முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி உள்ளிட்டோர் சொத்துவரி மதிப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளது என கூறி இதற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையே இணை கமிஷனர் ரவீந்திரா மாமன்றத்தில் விளக்கம் அளித்தார். அதை ஏற்க முடியாது என ஒட்டுமொத்த உறுப்பினர்களும் போர்க்குரல் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.