பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே உள்ளது பாலூர் கிராமம். இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள சேரன் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. நாளடைவில் ஆழ்துளை கிணறு நீரின்றி வறண்டுவிட்டது. ஆனால் பயனற்ற இந்த ஆழ்துளை கிணறு மூடப்படவில்லை. இதனை அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர். இப்பகுதி வழியாக கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் மீண்டும் ஆழ்துளை கிணறு மீது மூடப்பட்ட மூடிகள் உடையும் அபாயம் உள்ளது. எனவே ஆழ்துளை கிணறுகளை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.