வருஷநாடு: வருசநாடு அருகே உள்ள காந்திகிராமத்துக்கு தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்டது காந்திகிராமம் மலைக்கிராமம். இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் விளைந்த விளை பொருட்களை தேனி, ஆண்டிபட்டி, மதுரை, கம்பம், சின்னமனூர் ஆகிய பகுதிகளுக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இப்பகுதி மாணவ, மாணவிகள் அருகில் உள்ள தும்மக்குண்டு அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.