கோராபுட்: ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுக்கும் மக்களுக்கு, ஒருவேளை உணவை இலவசமாக வழங்கும் திட்டம் ஒடிசாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் ‘ஆஹார்’ என்ற இலவச உணவு வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.5.க்கு துவரம் பருப்பு கூட்டுடன் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்துடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘கோட்பேட் கவுன்சில்’ என்ற அமைப்பு முடிவு செய்தது. இதற்காக புதுமையான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் முதன்மை அதிகாரி அலோக் சமன்தராய் கூறியதாவது:
பிளாஸ்டிக் கழிவுகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், பறவைகளின் உயிருக்கும் கேடு விளைவிக்கிறது. இந்த கழிவுகளை மழை நீர் பாயும் வடிகால்களை அடைத்து கொண்டு சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கின்றன.