ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அழகன்குளத்தில் 2017ம் ஆண்டு தொல்லியல் துறையினர் நடத்திய அகழாய்வில் பழங்கால பொருட்கள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வேறு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட அகழாய்வை உடனடியாக தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார். அழகன்குளத்தில் இருந்து கடல் வழியாக வணிகம் செய்தது போன்றவற்றை எல்லாம் அகழ்வாராய்ச்சியில் கிட்டத்தட்ட 8 கட்டமாக நடத்தப்பட்டது.