அஜ்மீரில் காந்தி சிலை சேதம்

ஜெய்பூர்: அஜ்மீரில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரின் காந்தி சவுக் பகுதியில் காந்தி சிலை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக, நசிராபாத் போலீசில் அப்பகுதி மக்கள் புகார்  கூறினர். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: