இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா பயணத்தின்போது பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த பிரதமர் மோடியின் விமானத்திற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை மறுநாள் 29-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். அங்கு தங்கி இருக்கும் அவர், ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3-வது அமர்வில் கலந்து கொள்கிறார். இதையடுத்து அவர் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் சந்தித்து பேசுகிறார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்கிறார்.