மும்பை: நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) நிகர லாபம் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது முந்தைய ஆண்டு இதே காலத்தில் பெற்ற நிகர லாபம் ரூ.945 கோடியைவிட தற்போது ரூ.3,012 கோடி லாபம் ஈட்டியுள்ளது. எஸ்பிஐயின் லாபம் இந்த அளவுக்கு உயரக் காரணம், வாராக்கடன் சுமை குறைந்தது மற்றும் சொத்து மதிப்பு உயர்ந்ததுதான் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்லன. இதனுடைய நிகர வட்டி வருவாய் அல்லது கடன்களுக்கான வட்டி வருவாய்க்கும் டெபாசிட்களுக்கு கொடுக்கப்படும் வட்டிக்கும் உள்ள வித்தியாசம் ரூ.24,600 கோடியாக இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில் பெற்றதைவிட தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.