அரசு மருத்துவமனையில் ஆண் சடலம் மீட்பு

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் டெங்கு கொசு பரவுவதை தடுக்க, நேற்று காலை துப்புரவு மேற்பார்வையாளர் முன்னிலையில் கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள், டீன்  அலுவலகத்தின் பின்புறம் கொசு மருந்து அடிக்க சென்றபோது, அங்கு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, அந்த சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்து கிடந்தவர் லுங்கி, சட்டை அணிந்திருந்தார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார்,  யாரேனும் அடித்து கொன்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: