நாகர்கோவில்: குமரி மாவட்ட மீனவர்கள் கேரளா, கர்நாடகம், கோவா போன்ற மேற்கு கடலோர பகுதிகளில்தான் மீன் பிடிக்க செல்வார்கள். அதன்படி, ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கேரள மாநிலம் பேய்ப்பூரில் இருந்து மீன் பிடிக்க சென்ற பல்லக்கு மற்றும் கரிஷ்மா என்ற விசைப்படகுகளில் 35 தமிழக, கேரள மீனவர்கள் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் சூறைக்காற்றில் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று மதியம் கரிஷ்மா படகின் ஓட்டுனர் ஜார்ஜ், தொலைபேசியில் தொடர்பு கொண்டு காற்றின் வேகம் குறைந்துள்ளதால், இரு படகுகளும் கர்நாடக மாநிலம் கார்வார் மீன்பிடி துறைமுகத்தை நோக்கி வந்து ெகாண்டு இருப்பதாக கூறி உள்ளனர். இன்று அதிகாலையில் துறைமுகத்துக்கு வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.