சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரல் - எர்ணாகுளம் ஜங்ஷன் இடையே சுவீதா சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.50 மணிக்கு எர்ணாகுளம் ஜங்ஷன் சென்றடையும். அதேப்போல், நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இன்று 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேலும் தாம்பரம் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் நாளை இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.