பெர்காம்பூர்: `‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்’’ என்று ஒடிசா மாநிலத்தில் கலெக்டர் ஒருவர் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநில மக்களிடையே பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகியவை குறித்த மூடநம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் அங்குள்ள கோபாபூர் கிராமத்தில் மாந்திரீக நம்பிக்கையை அவமதித்த ஆறு பேரின் பல்லை பிடுங்கி, மலத்தை உண்ண வைத்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.